மேற்கு வங்கம்: 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகிதம் வாக்குப் பதிவு
மேற்கு வங்க இறுதிக் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க இறுதிக் கட்ட வாக்குப் பதிவில் மாலை 5.30 மணி நிலவரப்படி 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு 4 மாவட்டங்களிலுள்ள 35 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.
4 மாவட்டங்களில் அதிகபட்சமாக பிர்பும் மாவட்டத்தில் 81.82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதிகளின்படி முர்ஷிபாத் மாவட்டத்தில் ஹரிஹரபரா தொகுதியில் அதிகபட்சமாக 84.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
Advertisement
Advertisement
ஒட்டுமொத்தமாக மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தம் 76.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.