முகப்பு
இந்தியா

கிராமங்களில் கரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை: உ.பி. அரசுக்கு மாயாவதி பரிந்துரை

கிராமப் பகுதிகளில் கரோனா பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பரிந்துரைத்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
பகிர்:

கிராமப் பகுதிகளில் கரோனா பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பரிந்துரைத்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நகரங்களைப் போன்று கிராமப்புறங்களிலும் கரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே, கிராமப் பகுதிகளில் கரோனா பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

அதேபோல கரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மாநிலத்தில் கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.