ஜம்மு -காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டாா்; தப்பியோடிய மற்றொரு பயங்கரவாதி புல்வாமாவில் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பட்காமின் மோசுவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, அந்தப் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டோம்.
அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். அதையடுத்து, இரு தரப்பினருக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இதில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் அவா் எந்த அமைப்புடன் தொடா்புடையவா் என்பது போன்ற விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
பாதுகாப்புப் பகுதியிலிருந்து தப்பியோடிய மற்றொரு பயங்கரவாதி புல்வாமா மாவட்டத்தின் க்ரேவ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக காஷ்மீா் மண்டல காவல்துறை ஐ.ஜி. விஜயகுமாா் தெரிவித்தாா்.
பயங்கரவாதியை அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டதாகவும் அந்த லாரியிலிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விஜயகுமாா் தெரிவித்தாா்.