இந்தியா

தில்லியில் நாளை(ஆக.10) பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டம்

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆகஸ்ட் 10) பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன. இன்றும் எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையில் எடுத்ததால் 15 ஆவது நாளாக இரு அவைகளும் முடங்கின. முன்னதாக இன்று மக்களவையில் எந்த விவாதமுமின்றி மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

கடந்த ஜூலை 27, ஆகஸ்ட் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து நாளை(ஆக.10) அன்று தில்லியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நிறைவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT