அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்) 
இந்தியா

இணையத்தில் போக்குவரத்துத் துறை சேவைகள்: நாளை முதல் தொடக்கம்

தில்லியில் போக்குவரத்துத் துறை சேவைகளை இணைய வாயிலாக மேற்கொள்ளும் வகையிலான திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை (ஆக. 11) தொடக்கி வைக்கவுள்ளார். 

DIN


தில்லியில் போக்குவரத்துத் துறை சேவைகளை இணைய வாயிலாக மேற்கொள்ளும் வகையிலான திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை (ஆக. 11) தொடக்கி வைக்கவுள்ளார். 

இதனை தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உறுதி செய்துள்ளார். 

இதன் மூலம் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் போன்ற போக்குவரத்துத் துறை சார்ந்த சேவைகளையும் சான்றிதழ்களையும் இனி இணையம் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

இந்தத் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை தில்லியில் தொடக்கி வைக்கவுள்ளார். 

இந்தியாவில் முதல் முறையாக போக்குவரத்துத் துறை சார்ந்த அனைத்து சேவைகளும் இணையவழியில் மேற்கொள்ளப்படுவது தில்லில் தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு சேவைகளை இணையவழியில் மேற்கொள்ளும் வகையிலான திட்டங்களை தில்லி அரசு சமீபகாலமாக அறிமுகம் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT