நாடு முழுவதும் உள்ள 11,649 திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தின் போது திருநங்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கியது தொடர்பாக எழுத்துப்பூர்வ அறிக்கையை மத்திய அமைச்சர் நாராயணசாமி மாநிலங்களவையில் அளித்தார்.
“கரோனா பொதுமுடக்கத்தால் போடப்பட்ட பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த திருநங்கைகளுக்கு ரூ. 1,500 நிவாரண நிதி வழங்கப்பட்டன. முதல் அலையில் 5,711 பேருக்கு, இரண்டாம் அலையில் 5,938 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டன.
அதிகபட்சமாக தமிழகத்தில் முதல் அலையின் போது 1,036, முதல் அலையின் போது 710 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.