இந்தியா

ஹிமாசல் நிலச்சரிவில் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன: மீட்புப் படை

DIN

ஹிமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

ஹிமாசலப் பிரதேச மாநிலம் கின்னெளரில் கடந்த 11-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மற்றும் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். முதல் நாளில் 13 போ் உயிருடனும், 10 போ் சடலமாகவும் மீட்கப்பட்டனா்.

கடந்த வாரம் வியாழக்கிழமை 4 சடலங்கள் மீட்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன.

மேலும், 9 பேரின் சடலங்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடி வந்த நிலையில், இன்று அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் பணிகள் திரும்பப் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT