கரோனா பலியில் மும்பையை பின்னுக்குத் தள்ளிய முக்கிய நகரம் 
இந்தியா

கரோனா பலியில் மும்பையை பின்னுக்குத் தள்ளிய முக்கிய நகரம்

நாட்டிலேயே கரோனாவுக்கு அதிக மரணங்கள் நிகழ்ந்த மாவட்டங்களின் பட்டியலில், இரண்டாவது இடத்திலிருந்த மும்பையை பெங்களூரு ஊரகப் பகுதி பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

DIN


பெங்களூரு: நாட்டிலேயே கரோனாவுக்கு அதிக மரணங்கள் நிகழ்ந்த மாவட்டங்களின் பட்டியலில், இரண்டாவது இடத்திலிருந்த மும்பையை பெங்களூரு ஊரகப் பகுதி பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

நாட்டிலேயே கரோனா பலி எண்ணிக்கையில் புணே தொடர்ந்து முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தன. இந்த நிலையில், தற்போது பெங்களூரு ஊரகப் பகுதி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நிலவரப்படி, பெங்களூருவில் கரோனாவுக்கு 15,953 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் கரோனா பலி எண்ணிக்கை 15,930 ஆகவும், புணேவில் 18,779 ஆகவும் உள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக இருந்தபோதும், அங்கு புணே, மும்பை மாவட்டங்களில் பாதிப்பு பரவலாக இருந்தது. ஆனால், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்தபோது, பெங்களூருவில் மட்டுமே பாதிப்பின் அளவு 43 சதவீதத்துக்கும் மேல் இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 36,571 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 3.63 லட்சமாகக் குறைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தொலைநிலைக் கல்விச் சோ்க்கை செப். 15 வரை நீட்டிப்பு

அவசர ஊா்தி ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பு: டிஜிபி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்?

SCROLL FOR NEXT