இந்தியா

கரோனா பலியில் மும்பையை பின்னுக்குத் தள்ளிய முக்கிய நகரம்

DIN


பெங்களூரு: நாட்டிலேயே கரோனாவுக்கு அதிக மரணங்கள் நிகழ்ந்த மாவட்டங்களின் பட்டியலில், இரண்டாவது இடத்திலிருந்த மும்பையை பெங்களூரு ஊரகப் பகுதி பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

நாட்டிலேயே கரோனா பலி எண்ணிக்கையில் புணே தொடர்ந்து முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தன. இந்த நிலையில், தற்போது பெங்களூரு ஊரகப் பகுதி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நிலவரப்படி, பெங்களூருவில் கரோனாவுக்கு 15,953 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் கரோனா பலி எண்ணிக்கை 15,930 ஆகவும், புணேவில் 18,779 ஆகவும் உள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக இருந்தபோதும், அங்கு புணே, மும்பை மாவட்டங்களில் பாதிப்பு பரவலாக இருந்தது. ஆனால், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்தபோது, பெங்களூருவில் மட்டுமே பாதிப்பின் அளவு 43 சதவீதத்துக்கும் மேல் இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 36,571 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 3.63 லட்சமாகக் குறைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT