குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது.
இதுதொடா்பாக அந்த மாநில தலைநகா் காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் கூறுகையில், ‘‘கட்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் 12.08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது. அந்த மாவட்டத்தில் உள்ள தோலாவீரா பகுதியின் கிழக்கு-தென்கிழக்கு திசையில் 23 கி.மீ. தொலைவில் பூமிக்கு கீழே 6.1 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது’’ என்று தெரிவித்தது.
எனினும் நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதியும் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகுகளாக பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.