இந்தியா

விவசாயிகள் மீதான தாக்குதல் தேசத்திற்கான அவமானம்: சஞ்சய் ரெளத்

ANI

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேசத்திற்கான அவமானம் என சிவசேனை கட்சியின் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் கர்ணல் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில், பல விவசாயிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் கூறியது:

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தேசத்திற்கான அவமானம். இது வகையான தலிபானியர்களின் மனநிலையாக உள்ளது. இந்த அரசாங்கம் விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கானது என்று எப்படி கூறுகிறார்கள்? என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT