வெலிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
கோவையிலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இதையடுத்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்களை அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரில் உள்ள மேஜர் நாகேஷ் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
அந்தவகையில், விபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 13 பேரின் உடல்களுக்கும் வீர வணக்கம் செலுத்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், 13 பேரின் உடல்கள் சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இதையும் படிக்க | வெலிங்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உடல்