ஆந்திரம் - ஆற்றில் பேருந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி
ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றுப் பாலத்தைக் கடக்க முயன்ற போது பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலி.
ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றுப் பாலத்தைக் கடக்க முயன்ற போது பேருந்து ஆற்றில் பாய்ந்ததில் 9 பேர் பலி.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தைக் கடக்க முயன்ற அரசுப் பேருந்து திடீரென ஆற்றில் பாய்ந்தததில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
26 பேர் பயணித்த பேருந்தில் நீரில் மூழ்கி 9 பேர் பலியானதால் மாயமானவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Advertisement