இந்தியா

அரசுப் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்த ம.பி. அமைச்சர்

ANI


குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் கழிப்பறையை, அந்த மாநில எரிசக்தித் துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் சுத்தம் செய்தார்.

சுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மத்தியப் பிரதேச அமைச்சர் இவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

பள்ளியில் கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை என்று என்னிடம் ஏராளமான பள்ளி மாணவிகள் புகார் குறினார்கள். இதைத்தான் அவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்னையாக நினைக்கிறார்கள்.

எனவே, 30 நாள்கள், கழிப்பறையின் சுத்தத்தை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கல்வி நிலையத்துக்குச் சென்று, அங்கு நானே கழிப்பறைகளை சுத்தம் செய்து, சுத்தத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். இதன் மூலம் மற்றவர்களும் இதனை பின்பற்றுவார்கள் என்றார்.

நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், நாள்தோறும் அரசுப் பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT