இந்தியா

இந்திய குடியுரிமைக்காக 7,306 பாகிஸ்தானியர்கள் காத்திருப்பு

DIN

பாகிஸ்தானை சேர்ந்த 7,306 பேர் இந்திய குடியுரிமைக்காக காத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை இந்திய குடியுரிமைக்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்த கேள்வியை மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் வகாப் கேட்டிருந்தார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் கூறியதாவது:

டிசம்பர் 14, 2021 வரை வெளிநாடுகளை சேர்ந்த 10,635 பேர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். அவர்களில் 7,306 பேர் பாகிஸ்தான் நாட்டினர்.

மேலும், 1,152 ஆப்கானிஸ்தான், 223 ஸ்ரீலங்கா, 223 அமெரிக்கா, 189 நேபாளம், 161 வங்கதேசம், சீனா 10, 223 பிற நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கபட்டு வருவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT