மத்திய அரசு 
இந்தியா

இந்திய குடியுரிமைக்காக 7,306 பாகிஸ்தானியர்கள் காத்திருப்பு

பாகிஸ்தானை சேர்ந்த 7,306 பேர் இந்திய குடியுரிமைக்காக காத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

பாகிஸ்தானை சேர்ந்த 7,306 பேர் இந்திய குடியுரிமைக்காக காத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை இந்திய குடியுரிமைக்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்த கேள்வியை மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் வகாப் கேட்டிருந்தார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் கூறியதாவது:

டிசம்பர் 14, 2021 வரை வெளிநாடுகளை சேர்ந்த 10,635 பேர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். அவர்களில் 7,306 பேர் பாகிஸ்தான் நாட்டினர்.

மேலும், 1,152 ஆப்கானிஸ்தான், 223 ஸ்ரீலங்கா, 223 அமெரிக்கா, 189 நேபாளம், 161 வங்கதேசம், சீனா 10, 223 பிற நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கபட்டு வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT