முகப்பு
இந்தியா

ஜனவரி 3 முதல் குழந்தைகளுக்குத் தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியா

ஜனவரி 3 முதல் குழந்தைகளுக்குத் தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:


நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் பேசியதாவது:

  • நிறைய நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால், பாதிப்புகள் அதிகரிக்கின்றன.

  • ஒமைக்ரானை கண்டு மக்கள் பதற்றம் அடையாமல் முகக் கவசம் அணிந்து, கைகளை முறையாகக் கழுவினாலே போதுமானது.

  • நாட்டில் 18 லட்சம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.

  • 1.40 லட்சம் ஐசியூ படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.

  • குழந்தைகளுக்கான ஐசியூ மற்றும் ஐசியூ உதவி இல்லாத 90 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.

  • நாடு முழுவதும் 4 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

  • உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில் விரைவில் தொடங்கப்படும்.

  • கரோனா தீவிரத்தன்மையை உணர்ந்து நாட்டில் 141 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

  • 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

  • 15-18 வயதுடைய குழந்தைகளுக்கு ஜனவரி 3, 2022 முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

  • ஜனவரி 10 முதல் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

  • இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஜனவரி 10, 2022 முதல் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →