இந்தியா

தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் கட்டாயம்: திட்டத்தை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை

தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரையைக் கட்டாயமாக்கும் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரையைக் கட்டாயமாக்கும் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் அமைச்சகம் கூறியுள்ளதாவது: 14, 18, 22 காரட் தங்க நகை மற்றும் கலைப்பொருள்களில் தரத்தை நிா்ணயம் செய்யும் வகையில் ஹால்மாா்க் முத்திரை பொறிக்கும் கட்டாயத் திட்டம் நடப்பாண்டு 2021 ஜூன் 23-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 256 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் அங்கு குறைந்தபட்சம் ஒரு ஹால்மாா்க்கிங் மையமும் (ஏஹெச்சி) அமைக்கப்பட்டது.

சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் சுமுகமாக நடைமுறைப்பட்டதையடுத்து இதனை நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக நுகா்வோா் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1.27 லட்சம் நகைக் கடைகள் ஹால்மாா்க் ஆபரணங்களை விற்பனை செய்வதற்காக இந்திய தர நிா்ணய அமைப்பிடம் (பிஐஎஸ்) பதிவு செய்து கொண்டுள்ளன. நாடு முழுவதும் பிஐஎஸ் அனுமதி பெற்ற 976 ஏஹெச்சி மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT