RT-PCR test must for Maharashtra-bound travellers from Kerala 
இந்தியா

கேரளத்திலிருந்து மகாராஷ்டிரம் செல்லும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயம்

மேற்கு வங்கு மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனையை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

PTI

மேற்கு வங்கு மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனையை மகாராஷ்டிர அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

புதன்கிழமை நிலவரப்படி கேரளத்தில் தற்போது 64,349 பேர் தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்துவருகின்றனர். நாட்டில் கரோனா பாதிப்பில் முன்னணியில் மகாராஷ்டிரா மாநிலம் இருந்து வருகிறது. 

தென் மாநிலத்தில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,980 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கட்டாயம் செய்துகொள்ளவேண்டும் என்று மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நிறுவன செயலாளர் அனூப் குமார் தெரிவித்தார். 

பயணம் செய்யத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் இந்த சோதனை செய்யப்பட வேண்டும். 

கடந்த ஆண்டு நவம்பர் முதல் தில்லி, கோவா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இதுபோன்ற சோதனைகள் ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் 3,451 பேருக்குப் புதிதாகத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20,52,253 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய் காரணமாக மாநிலத்தில் இதுவரை 51,390 பேர் உயிரிழந்துள்ளனர்  என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT