சாலைப் பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி கடன் வாங்கத் திட்டம்: சவான்
சாலைகளை நிர்மாணிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.
சாலைகளை நிர்மாணிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் திங்களன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சாலைப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சாலைகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதி மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும்.
இதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15,000 கோடியைப் பெயரளவு வட்டி விகிதத்தில் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை கடன் பெற மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கடன் விண்ணப்பத்திற்கு அமைச்சரவை அனுமதி பெறும் செயல்முறை நடந்து வருகிறது. சொத்து பணமாக்குதல் மூலம் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளோம்.
கடந்தாண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாகச் சாலைப் பணிகளுக்காக 30-40 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு எங்களுக்குக் கூடுதல் நிதி தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலையடுத்து, பிப்ரவரி 19-ஆம் தேதி திட்டமிடப்பட்ட சிவ் ஜெயந்தி வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் கொண்டாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.