ஜம்மு: ஜம்முவில் உள்ள ராம்பன், கிஷ்த்வாா் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் குப்கா் கூட்டணி வெற்றி பெற்றது. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கிய குப்கா் கூட்டணியின் வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.
ராம்பன் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கிஷ்த்வாா் மாவட்டத்திலும் தேசிய மாநாட்டுக் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மூன்று காங்கிரஸ் உறுப்பினா்கள் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனா். பாஜக சாா்பில் மூன்று உறுப்பினா்கள் அங்கு வெற்றி பெற்றனா்.
கடைசி கட்டத் தோ்தல் ரஜௌரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.