இந்தியா

தில்லியில் இன்று புதிதாக 243 பேருக்கு கரோனா

DIN

தில்லியில் இன்று புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தில்லியில் இன்று மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 67,484 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
அதில் 45,873 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 21,611 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா தொற்றால் தலைநகரில் இன்று 3 உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 10,909-ஆக அதிகரித்துள்ளது. 
அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 164 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,26,876-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,307 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 627 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,315 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT