முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் ஜனவரி 5 முதல் திறப்பு

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் ஜனவரி 5ஆம் தேதி முதல் மக்கள் வருகைக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
குடியரசுத் தலைவர் மாளிகை
பகிர்:

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் ஜனவரி 5ஆம் தேதி முதல் மக்கள் வருகைக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் கரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டன. அவ்வகையில் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகமும் தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் ஜனவரி 5ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திங்கள்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களைத் தவிர மற்ற நாள்களில் அருங்காட்சியகம் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →