இந்தியா

கேரளத்திலிருந்து கோழி இறக்குமதி செய்யத் தடை: ம.பி. முதல்வர்

DIN

கேரளத்திலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், பரவாமல் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகளுடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் இன்று (ஜன.2) காலை ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மத்தியப் பிரதேசத்திலுள்ள கோழி வளர்ப்புப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை.

பறவைக் காய்ச்சல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளத்திலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT