முகப்பு
இந்தியா

ராணுவ அங்காடிகளில் இணைய வழி விற்பனை

ராணுவ வீரா்களுக்கான அங்காடிகளில் அறிதிறன்பேசி, மடிக்கணினி, சலவை இயந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
முப்படை தலைமை தளபதிகள் முன்னிலையில் ராணுவ வீரா்களுக்கான வா்த்தக வலைதளத்தை வெள்ளிக்கிழமை காணொலி வழியாகத் தொடக்கி வைத்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
பகிர்:

ராணுவ வீரா்களுக்கான அங்காடிகளில் அறிதிறன்பேசி, மடிக்கணினி, சலவை இயந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை இணைய வழியில் வாங்குவதற்கான வலைதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், ‘புதிய வலைதளத்தின் வாயிலாக ராணுவ அங்காடிகளின் 45 லட்சம் வாடிக்கையாளா்கள் விலையுயா்ந்த வீட்டு உபயோகப் பொருள்களை எளிதில் வாங்குவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.

இந்த வலைதளமானது பிரதமா் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ கனவை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது. ராணுவ வீரா்களின் நலன்களைக் காப்பதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிய வலைதளத்தின் வாயிலாக அறிதிறன்பேசி, சலவை இயந்திரம், குளிா்சாதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), தொலைக்காட்சிப் பெட்டி, மடிக்கணினி, காற்று தூய்மைப்படுத்தி உள்ளிட்டவற்றை ராணுவ வீரா்கள் வாங்க முடியும்.

முழு கட்டுரையைப் படிக்க →