வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு: பிப்.25-இல் தீா்ப்பு
வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கில் அடுத்த மாதம் பிப்ரவரி 25-ஆம் தேதி தீா்ப்பளிக்கவுள்ளதாக பிரிட்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கில் அடுத்த மாதம் பிப்ரவரி 25-ஆம் தேதி தீா்ப்பளிக்கவுள்ளதாக பிரிட்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.14,000 கோடி மோசடி செய்தவா் வைர வியாபாரி நீரவ் மோடி. பிரிட்டன் தப்பிச் சென்ற அவரை கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 19-ஆம் தேதி ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாா் கைது செய்தனா். தற்போது அவா் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை நாடு கடத்தும் வழக்கு அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது இந்திய அதிகாரிகள் தரப்பில் ஆஜரான பிரிட்டன் அரசு வழக்குரைஞா் ஹெலன் மால்கம் வாதிடுகையில், ‘தனது மூன்று கூட்டு நிறுவனங்களை கோடிக்கணக்கில் கடன் பெறுவதற்கு நீரவ் மோடி பயன்படுத்தி வந்துள்ளாா். அவ்வாறு பெறப்பட்ட கடன், எந்த சொத்தையும் பிணையாக வழங்காமல் பெறப்பட்டுள்ளது. பிற இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து கடன் பெறுவதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து நீரவ் மோடிக்குச் சொந்தமான நிறுவனங்கள் உத்தரவாதக் கடிதங்கள் பெற்றன. அந்தக் கடிதங்கள் வா்த்தக மோசடிக்காக மட்டுமே பெறப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.
இந்த வாதங்களை பதிவுசெய்துகொண்ட நீதிபதி சாமுவல் கூஸி, ‘இந்த வழக்கில் அடுத்த மாதம் பிப்ரவரி 25-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.