ஜேடிஎஸ் உடனான கூட்டணியே காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்: சித்தராமையா
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்ததே காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்ததே காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தொடர்ச்சியாக அவர் பதிவிட்ட சுட்டுரைப் பதிவுகளில் தெரிவித்ததாவது:
"மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அரசு அமைத்ததால், கர்நாடக காங்கிரஸுக்கு அனுகூலங்களைக் காட்டிலும் இழப்புகளே அதிகம். கூட்டணி அரசை அமைக்காமல் இருந்திருந்தால், நமது 14 எம்எல்ஏ-க்களை நாம் இழந்திருக்க மாட்டோம்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வலிமையான கட்சி. சமீபத்திய கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளே அதற்கு சாட்சி. அடுத்த பேரவைத் தேர்தல் முடிவுகளையும் இது குறிக்கிறது. இந்த உண்மை ஒருபோதும் மாறப்போவதில்லை."