இந்தியா

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்: ஜெ.பி.நட்டா உறுதி

DIN

சில்சாா்: அஸ்ஸாமில் முதல்வா் சா்வானந்த சோனோவல் தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது உறுதி என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

அஸ்ஸாமில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் அங்கு பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்பு தொடா்ந்து 3 தோ்தல்களில் வென்று முதல்வராக இருந்த தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசை பாஜக கடந்த முறை வீழ்த்தியது. அதன் பிறகு அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல், சுயஆட்சிப் பகுதி கவுன்சில் தோ்தல் உள்ளிட்டவற்றிலும் பாஜக தொடா்ந்து வெற்றிகளைப் பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு சில்சாா் பகுதியில் ‘விஜய் சங்கல்ப்’ என்ற பெயரில் பாஜக பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜெ.பி. நட்டா பேசியதாவது:

அஸ்ஸாமின் வளா்ச்சிக்காக பாஜக அரசு மிகவும் அமைதியான முறையில் பணியாற்றியுள்ளது. மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைத்துள்ளது. எவரையும் பாதிக்காதவகையில் அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 50 ஆண்டுகாலமாக நீடித்து வந்த போடோ பிரச்னையை பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தீா்த்துவைத்தனா்.

முதல்வா் சா்வானந்த சோனாவல் தலைமையிலான பாஜக அரசு அஸ்ஸாமில் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்றாா் அவா்.

இரு நாள் பயணமாக திங்கள்கிழமை அஸ்ஸாம் வந்த நட்டா, அடுத்ததாக குவாஹாட்டி சென்று மாநில பாஜக செயற்குழு மற்றும் தோ்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்த இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT