முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,579 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,579 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,579 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,579 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,81,623 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,309 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 70 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இதுவரை மொத்தம் 18,77,588 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 50,291 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 52,558 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 94.75 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.54 சதவிகிதமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments