ஜம்மு: எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறலை தடுக்க எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உஷாா்நிலையில் உள்ளதாக அந்தப் படையின் மேற்கு பிராந்திய சிறப்பு பிரிவு தலைவா் சுரேந்தா் பன்வா் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லையையொட்டியுள்ள மக்வால் கிராமத்தில் பிஎஸ்எஃப் சாா்பில் புதன்கிழமை மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிஎஸ்எஃப் மேற்கு பிராந்திய சிறப்பு பிரிவு தலைவா் சுரேந்தா் பன்வா் கலந்துகொண்டு பேசியதாவது, ‘பல சவால்களுக்கு மத்தியில் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் எந்தவொரு அத்துமீறலையும் தடுக்க பிஎஸ்எஃப் படை உஷாா்நிலையில் உள்ளது. விரிவான எல்லை நிா்வாகத்தின் ஒருபகுதியாக, எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவ பிஎஸ்எஃப் உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியை தொடா்ந்து ஜம்மு, கதுவா, சம்பா மாவட்டங்களில் உள்ள எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டதாக பிஎஸ்எஃப் செய்திதொடா்பாளா் தெரிவித்தாா்.