ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,.
இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாளையொட்டி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 நிமிடம் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.
உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்து, 2 நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.