மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,752 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 1,743 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 45 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,09,106 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19,12,264 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 50,785 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 44,831 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
அங்கு குணமடைவோர் விகிதம் 95.18 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.53 சதவிகிதமாக உள்ளது.
மும்பை:
மும்பையில் 479 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,06,050 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 11,304 ஆக உயர்ந்துள்ளது.