ஆந்திரம், தெலங்கானாவில் 31 ரயில் நிலையங்கள் தற்காலிக மூடல்
ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் தென் மத்திய ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட 31 ரயில் நிலையங்களை மூட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் தென் மத்திய ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட 31 ரயில் நிலையங்களை மூட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கரோனா தொற்று காரணமாக சில ரயில் நிலையங்களில் பயணிகளின் வருகை இல்லாத காரணத்தால் அவற்றை மூட தெற்கு மத்திய ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
பிப்.1 முதல் 29ஆம் தேதி வரை ஒரு சில ரயில் நிலையங்களும், ஏப்.1ஆம் தேதி முதல் கூடுதலாக சில ரயில் நிலையங்களையும் மூட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
இதில் ஒரு ரயில் நிலையத்தை தவிா்த்து மற்ற அனைத்து ரயில் நிலையங்களும் ஆந்திரம், தெலங்கானாவில் உள்ளன. செகந்திராபாத் பிரிவில் உள்ள 16 ரயில் நிலையங்கள், குண்டக்கல் பிரிவில் 3 ரயில் நிலையங்கள், நாந்தேட் பிரிவில் ஒரு ரயில் நிலையம், குண்டூரை சோ்ந்த 4 ரயில் நிலையங்கள், ஹைதராபாத் பிரிவைச் சோ்ந்த 7 ரயில் நிலையங்கள் என 31 ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளன.