புதுதில்லி: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஷரத் திரிபாதியின் அகால மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நாடாளுமன்ற பாஜக முன்னாள் உறுப்பினர் ஷரத் திரிபாதியின் அகால மரணம் என்னையும், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் சமுதாயத்திற்கு சேவை செய்வதையும், நலிவுற்ற மக்களுக்காக உழைப்பதையும் மிகவும் நேசித்தார். கபீர்தாசரின் கொள்கைகளை பிரபலப்படுத்துவதற்காக அவர் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.