தினசரி கரோனா பாதிப்பு 2.61%-ஆக குறைவு: சுகாதாரத் துறை
நாட்டில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.61 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.61 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வாரந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 5 சதவிகிதத்திலிருந்து 2.40 சதவிகிதமாக குறைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தற்போது 2-ம் அலையின் வேகம் சற்று குறைந்துள்ளது.
இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,796 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 42,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,00,430-ஆக உயர்ந்துள்ளது.
இதனால், நாட்டில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.61 சதவிகிதமாக குறைந்துள்ளது. வாரந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 5 சதவிகிதத்திலிருந்து 2.40 சதவிகிதமாக குறைந்துள்ளது.