இந்தியா

மகாராஷ்டிரம்: மின் சாதனங்கள் பழுது பார்க்கும் கடைகளில் தீ விபத்து

DIN

மகாராஷ்டிரத்தில் மின் & மின்னணு சாதனங்கள் பழுது பார்க்கும் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரம் மாநிலம் தானே ரயில் நிலையம் அருகே உள்ள பிரபாத் டாக்கீஸ் வளாகத்தில் உள்ள இரண்டு கடைகளில் இன்று காலை 8.52 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 

உடனடியாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

மின் கோளாறினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்து ஏற்பட்ட நேரத்தில் கடை பூட்டியிருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, பொருள்சேதம் அதிகம் ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT