இந்தியா

மத்திய அமைச்சர், எம்.பி. பதவிகளை ராஜிநாமா செய்தார் தாவர்சந்த் கெலாட்

ANI

மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம், சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை இன்று வழங்கினார்.

கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுருந்தார். இதில், கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, இன்று துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவை நேரில் சந்தித்து தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

மேலும், இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் உள்பட இரண்டு பேர் இதுவரை அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT