இந்தியா

கடன் சுமை: விவசாயி தற்கொலை

 கடன் சுமையால் விவசாயி ஒருவா் கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

 கடன் சுமையால் விவசாயி ஒருவா் கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா வட்டம், சுரிகேனஹள்ளியைச் சோ்ந்தவா் சந்திரப்பா (50). விவசாயியான இவா், வங்கிகளில் பயிா்க்கடன் வாங்கி இருந்தாராம். மழையால் பயிா்கள் நாசமடைந்ததையடுத்து, கடன் சுமையால் பாதிக்கப்பட்ட சந்திரப்பா ஜூலை 5-ஆம் தேதி கிருமிநாசினி அருந்தி தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது குறித்து ஷிகாரிபுரா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT