முகப்பு
இந்தியா

தில்லியில் குறைந்த கரோனா தொற்று: ஒருநாள் பாதிப்பு 77ஆக பதிவு

தில்லியில் புதிதாக 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் புதிதாக 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76,095 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 77 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் விகிதம் 0.10 சதவிகிதம்.

மேலும் 71 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,35,281 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,09,572 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25,021 பேர் பலியாகியுள்ளனர்.

688 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →