இந்தியா

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: பியூஷ் கோயல் கண்டனம்

ANI

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு பாஜக மாநிலங்களவைத் தலைவர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பியூஷ் கோயல் கூறியதாவது,

நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அசாதாரண சுழலை எதிர்கொண்டோம். மாநிலங்களவையில், அவைத் தலைவரின் உரையின்போது கூட இடையூறு செய்தார்கள் எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பெட்ரோல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT