முகப்பு
இந்தியா

மே மாதத்தில் ஏர் இந்தியாவின் 5 மூத்த விமானிகள் கரோனாவுக்கு பலி

கடந்த மே மாதத்தில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஐந்து மூத்த விமானிகள் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 3 ஜூன் 2021, 3:48 pm IST
மே மாதத்தில் ஏர் இந்தியாவின் 5 மூத்த விமானிகள் கரோனாவுக்கு பலி
பகிர்:

புது தில்லி:  கடந்த மே மாதத்தில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஐந்து மூத்த விமானிகள் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவியதால், ஏர் இந்தியா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மே 15-ஆம் தேதிதான் தொடங்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தனியார் விமான சேவை நிறுவனங்களான விஸ்தரா மற்றும் ஏர் ஆசியா இந்தியா விமான சேவை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை 99 சதவீதம் செய்துமுடித்துவிட்டது.

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மே மாத ஆரம்பத்திலிருந்தே ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கரோனா தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவியதால், மே 15ஆம் தேதிதான் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments