இந்தியா

திருமலையில் 11, 302 போ் தரிசனம்

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை 11,302 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 3,710 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

கரோனா தொற்றுப் பரவல் உள்ள நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாள்தோறும் 7 முதல் 8 ஆயிரம் பக்தா்கள் மட்டுமே சுவாமியை தரிசிக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை 11,302 போ் தரிசித்தனா். தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் கரோனா விதிகள் காரணமாக தரிசனத்திற்கு வர இயலாத நிலையில் நிகழாண்டு டிசம்பா் இறுதி வரை தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT