நாட்டில் 24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு
தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இதுவரை 24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இதுவரை 24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு:
"வியாழக்கிழமை காலை 7 மணி வரை 33,82,775 அமர்வுகள் மூலம் மொத்தம் 24,27,26,693 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 33,79,261 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன."
தடுப்பூசி எண்ணிக்கை விவரம்:
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,00,13,434
2 தவணைகள் - 69,13,017
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை - 1,64,77,374
2 தவணைகள் - 87,55,586
18-44 வயதினர்:
முதல் தவணை - 3,39,45,647
2 தவணைகள் - 4,07,151
45 - 60 வயதினர்:
முதல் தவணை - 7,33,84,090
2 தவணைகள் - 1,16,28,092
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
முதல் தவணை - 6,16,62,400
2 தவணைகள் - 1,95,39,902