மத்திய அரசு 
இந்தியா

மத்திய அரசின் இ-மெயில் அமைப்பில் சைபர் அத்துமீறல் நடைபெறவில்லை: மத்திய அரசு விளக்கம்

தேசிய தகவல் மையம் சாா்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் மத்திய அரசின் இ-மெயில்கள் அமைப்பில் சைபர் அத்துமீறல் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

DIN


புதுதில்லி: தேசிய தகவல் மையம் சாா்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் மத்திய அரசின் இ-மெயில்கள் அமைப்பில் சைபர் அத்துமீறல் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, பிக் பாஸ்கெட், டோமினோஸ் உள்ளிட்ட கணிப்பொறி தரவுகளில்  மா்ம நபா்கள் ஊடுருவியதாகவும், தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் மத்திய அரசின் இ-மெயில்கள் மற்றும் கடவுச்சொற்களை, கணினி ஊடுருவல்காரர்களுக்கு தெரிவித்துவிட்டதாக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தது.  

இந்நிலையில், மத்திய அரசின் மின்னணுவியல்-தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், 
தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் மத்திய அரசின் இ-மெயில் அமைப்பில் எந்த கணிப்பொறி தரவுகளிலும் சைபர் அத்துமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும்,  மத்திய அரசின் இ-மெயில் அமைப்பு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது.

அரசு இ-மெயில் முகவரிகளை பயன்படுத்துபவர்கள் வெளிப்புற இணையதளங்களில், அரசு இ-மெயில் முகவரியை பதிவு செய்து அதே கடவுச் சொல்லை பயன்படுத்தியிருந்தால் தவிர, தனியாா் நிறுவனங்களின் இணையதளங்களில் நடைபெறும் கணிப்பொறி பாதுகாப்பு அத்துமீறல்கள், அரசு இ-மெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் இ-மெயில் அமைப்பில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மற்றும் 90 நாள்களுக்கு ஒரு முறை கடவுச்சொல்லை மாற்றும் வசதிகள் உள்ளன.

மேலும், தேசிய தகவல் மையம் இ-மெயிலில் கடவுச் சொல்லை மாற்ற வேண்டும் என்றால், பதிவு செய்ய்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு கடவுச்சொல்(ஓடிபி) அவசியம். இந்த கடவுச் சொல் தவறாக இருந்தால், அவற்றை மாற்றுவது அவ்வளவு சாத்தியமானதல்ல. மத்திய அரசின் என்ஐசி இ-மெயில்களை பயன்படுத்தி தகவல்களை திருடும் எந்த முயற்சியையும் தேசிய தகவல் மையத்தால் குறைக்க முடியும். 

கணினி பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும், ஊடுருவல் அபாயம் குறித்தும் அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும் அரசு இ-மெயில் முகவரிகளை பயன்படுத்துவோருக்கு அவ்வப்போது விழிப்புணர்வு நடவடிக்கைகளை என்ஐசி மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது: மு. வீரபாண்டியன்

பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வாரம்

சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொருளாதார வளா்ச்சி, மனிதகுல எதிா்காலத்துக்கான முக்கிய இயந்திரம் அறிவியல்! நோபல் விஞ்ஞானி மவுங்கி பவெண்டி

எழுத்தாளா் அண்டனூா் சுராவின் உப்புலிக்குடி நாவலுக்கு பரிசு

SCROLL FOR NEXT