மும்பை தாராவிய்ல இன்று ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி மும்பை தாராவி. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியையும் கரோனா 2-ம் அலை விட்டுவைக்கவில்லை. இருப்பினும், அரசின் தீவிர நடவடிக்கையால் நோய் பரவல் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி, 99 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதே தாராவியில் கரோனா 2-ம் அலையின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
கடந்த 2 நாளாக ஒருவர்கூட தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்த தாராவியில் தற்போது ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 6 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.