இந்தியா

அசாம் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா; பாஜகவில் இணைகிறாரா?

DIN

அசாம் காங்கிரஸ் எம்எல்ஏ ருப்ஜோதி குர்மி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அசாம் மாநிலத்தில் நான்கு முறை எம்எல்ஏவான காங்கிரஸின் ருப்ஜோதி குர்மி கட்சியில் இருந்தும் எம்எல்ஏ பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அசாம் பேரவைத் தலைவர் பிஸ்வாஜித் டைமரியிடம் வழங்கினார்.

காங்கிரஸ் கட்சித் தலைமை இளம் தலைவர்களின் குரலைப் புறக்கணிப்பதால் தான் காங்கிரஸை விட்டு வெளியேறுவதாக ருப்ஜோதி தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் நிலைமை அனைத்து மாநிலங்களிலும் மோசமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமை சரியாக இல்லை. அவர் தலைவராக இருந்தால் கட்சி முன்னேறாது என்றும் கூறியுள்ளார். 

காங்கிரஸிலிருந்து விலகிய ருப்ஜோதி குர்மி, பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT