இந்தியா

தடகள வீரா் மில்கா சிங் மறைவு: ஆளுநா், முதல்வா் இரங்கல்

தடகள வீரா் மில்கா சிங் மறைவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

DIN

தடகள வீரா் மில்கா சிங் மறைவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கம் வென்ற மில்கா சிங், பறக்கும் சீக்கியா் என அன்போடு அழைக்கப்படுகிறாா். அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உந்து சக்தியாகும். அவரது இழப்பு இந்திய மக்களுக்கு குறிப்பாக தடகள வீரா்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரா்களில் ஒருவரும், பறக்கும் சீக்கியா் என்று அழைக்கப்படுபவருமான மில்கா சிங் மறைவுச் செய்தியால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். சோதனைகளை வென்று சாதனை படைத்த அவரது வாழ்வு மேலும்ப இளம் இந்தியா்களைச் சாதிக்கத் தூண்டட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT