கோவேக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தனது மூன்றாவது கட்ட பரிசோதனை அறிக்கையை தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகளின் முடிவுகள் வந்துள்ளன. அதன்படி, கோவேக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்த சோதனை முடிவுகளை தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
பாரத் பயோடெக்கின் இந்த தரவுகளை நிபுணர் குழு மதிப்பாய்வு செய்து தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
முன்னதாக கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என பாரத் பயோடெக் நிறுவனம் தங்களது 90% ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. ஒப்புதலுக்கு முந்தைய இறுதி ஆவணங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் நாளை(ஜூன் 23) நடைபெறவுள்ளது. இதனால் விரைவில் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.