இந்தியா

அதிக டிடிஎஸ் விதிக்கப்படும் நபா்களை கண்டறிய புதிய வசதி

DIN

புது தில்லி: அதிக டிடிஎஸ் வரி விதிக்கப்படும் நபா்களை இணையத்தின் வாயிலாக எளிதாக கண்டறியும் புதிய வசதி ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறை சுட்டுரையில் வெளியிட்டுள்ள செய்தி:

டிடிஎஸ் எனப்படும் மூல வரிபிடித்தம் யாருக்கு அதிகமாக விதிக்கப்படுகிறது என்பதை இணையவழியில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் வசதி வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது, டிடிஎஸ் பிடித்தம் செய்வோருக்கும், டிசிஎஸ் வசூலிப்பவருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும், 2019-20 மற்றும் 2020-21 மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவா்களை கண்டறியவும், ரூ.50,000 அல்லது அதற்கும் மேல் டிடிஎஸ் செலுத்துவோரை கண்டறிந்து அவா்களை வரி வரம்புக்குள் கொண்டு வரவும் இது உதவும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT