இந்தியா

ஜம்மு-காஷ்மீர் விமானப்படைத் தளத்தில் தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை

DIN

ஜம்மு விமானப்படைத் தளத்தில் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

விமானப்படை தளத்தை சேதப்படுத்திய குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீா் விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் நேற்று முன் தினம் (ஜூன் 27) விமானப்படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா்.

இந்த தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT