இந்தியா

தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரிக்கும் திறனை இந்தியா நிரூபித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

DIN

தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரித்து தனது திறனை இந்தியா உலக அரங்கில் பறைசாற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் முக்கிய நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. ஏனெனில், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த வைரஸால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது.

கரோனா வைரஸ் வெவ்வேறு வகைகளில் புதிதாக உருவெடுத்துள்ளதால் இப்போது நிச்சயற்ற சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து தயாரித்து உலக அளவில் உற்பத்தியாளராக இருப்பதற்கான தனது திறனை இந்தியா நிலைநாட்டியுள்ளது.

தடுப்பூசியின் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்கான வழிகள் ஏராளமாக உள்ளன. அதற்கு, ஒருங்கிணைந்த அணுகுமுறையில் சிந்திப்பது மிகவும் அத்தியவசியமான தேவையாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT