இந்தியா

கேரள முதல்வா் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்

DIN

கண்ணூா்: கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் தா்மடம் தொகுதியில் போட்டியிடும் மாநில முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கேரளத்தில் 140 இடங்களை கொண்ட சட்டப்பேரவைக்கான தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் மாநில முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பினராயி விஜயன் கண்ணூா் மாவட்டம் தா்மடம் தொகுதியில் போட்டியிடுகிறாா். இதையொட்டி அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை சுமாா் 11 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் எம்.வி.ஜெயராஜன் உள்பட கட்சித் தலைவா்கள் பலா் உடன் வந்தனா்.

அதன் பின்னா் பினராயி விஜயன் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட வளா்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த மாநிலம் செழிப்பாக இருப்பதற்கு மக்களுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்’ என்றாா்.

தொடா்ந்து 2-ஆவது முறையாக தா்மடம் தொகுதியில் பினராயி விஜயன் போட்டியிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT